அன்னி (நற்றிணை)

மருதம் - (?)

பழனப் பாகல் முயிறு மூசு குடம்பை
கழனி நாரை உரைத்தலின் செந்நெல்
விரவு வெள்ளரிசியின் தாஅம் ஊரன்
பலர்ப் பெறல் நசைஇ நம் இல் வாரலனே
மாயோள் நலத்தை நம்பி விடல் ஒல்லாளே
அன்னியும் பெரியன் அவனினும் விழுமிய
இரு பெரு வேந்தர் பொரு களத்து ஒழித்த
புன்னை விழுமம் போல
என்னொடு கழியும் இவ் இருவரது இகலே
தலைமகற்கு வாயில் நேர்ந்த தோழி
தலைமகளிடத்துப் பொறாமை கண்டு சொல்லியது
Category: 0 comments

No comments:

Post a Comment